பார்ப்பனர்கள் தமிழர்களா என்னும் விஷயமாய் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கேள்வி எழுந்து இதுபோது எங்கு பார்த்தாலும் அதே பேச்சாக இருந்து வருகிறது. இதைப்பற்றி ஏதாவது சிறிதாவது ஆராய்ச்சி செய்வதோ அல்லது அபிப்பிராயம் தெரிவிப்பதோ என்னும் காரியத்தை செய்ய வேண்டுமானால் முதலில் பார்ப்பனர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறோம் என்பதை விளக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகே பார்ப்பனர்கள் தமிழர்களா என்பதைப் பற்றி பேசுவது பயனளிக்கத் தக்கதாகும்.
ஆகவே பார்ப்பனர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை விளக்குவோம். நாம் இப்போது பார்ப்பனர்கள் என்று குறிப்பிடுவதானது யார் யார் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களோ, யார் யாரை தங்களை வருணாசிரம தரும முறைப்படி முதல் ஜாதியார், மேலான ஜாதியார் என்றும் மற்றவர்களைத் தங்களுக்கு கீழ்ஜாதியார் என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களை ஆரிய வேத சாஸ்திர முறைப்படி உயர்ந்த ஜாதியாய் கருதிக் கொண்டு மற்ற ஜாதியாருடன் உண்பன தொடுவன முதலாகிய காரியங்கள் செய்யக் கூடாதென்றும் அந்தப்படி செய்வது தோஷமான காரியமென்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களது நடை, உடை, பாவனை முதலியவைகளில் மற்ற ஜாதியர்களைவிட மாறுபட்டவர்களாய் இருப்பதோடு அவைகள் (அம்மாறுபாடுகள்) தங்களுக்கு மாத்திரம் உரியனவே ஒழிய மற்ற எவ்வகுப்பாருக்கும் உரியவல்ல என்று கருதுகிறார்களோ, யார் யாருக்கு சொந்த ஊர் என்பதொன்று இல்லாமல் தொழிலுக்கும், வாழ்வுக்கும் சென்ற இடங்களையே தங்களது இடமாகக் கொண்டு நாடெங்கும் திரிந்து வாழ்பவர்களாக இருக்கிறார்களோ, யார் யார் தமிழ் பாஷையை இழிவான பாஷை என்றும், தமிழைவிட உயர்ந்த பாஷை வேறு ஒரு பாஷை உண்டு என்றும் அதுதான் தேவ பாஷை, மற்றது மிலேச்ச பாஷை என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தாங்கள் வைதிக காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது தமிழ் பேசுவது தோஷமான காரியமென்று கருதுகிறார்களோ, யார் யார் தங்களுடைய முன்னோர்களும் கோத்திரத் தலைவர்களும் தமிழர்கள் அல்லவென்றும் அவர்கள் பேசிய பாஷை தமிழ் அல்லவென்றும் அவர்களது சரித்திரங்கள் தமிழில் இல்லை என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ, யார் யாருடைய சமய மூல ஆதாரங்கள் தமிழில் இல்லை வேறு பாஷையில்தான் இருக்கின்றன என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ இவர்கள் எல்லோருமே தமிழை தங்கள் தாய் பாஷையாகக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்கூட பார்ப்பனர்களே யாகும். ஆகவே, இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தமிழர்களாவார்களா என்பதுதான் இவ்வியாசத்தின் தலைப்பின் அர்த்தமாகும்.
இந்த எல்லைக்குள் வரும் பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கை அவசியத்தின் பொருட்டு தமிழ்நாட்டில் குடியேறிய காரணம் கொண்டு தமிழ் பேசுபவர்கள். ஆந்திர நாட்டில் குடியேறிய காரணத்தின் பொருட்டு தெலுங்கு பேசுவார்கள். இதுபோலவே வங்காளத்திலும், குஜராத்திலும், சிந்துவிலும், காஷ்மீரத்திலும், ஒரிஸாவிலும் குடியேறிய காரணத்தின் பொருட்டு அந்த அந்த நாட்டு பாஷையே பேசுகிறார்கள்.
ஆதலால் அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு பாஷையை பேசுகின்ற பார்ப்பன மக்கள் எல்லோரும் அந்தந்த நாட்டார் என்கிற உரி கொண்டாடவே அந்தந்த நாட்டார் என்கின்ற பட்டிகையில் சேர்க்கவோ தகுதியற்றவர்களேயாவார்கள்.
இந்த முறையிலேயே தமிழ்நாட்டில் உள்ள இந்த மாதிரி பார்ப்பனர்கள் தமிழர்களா என்பதை ஆராய்கிறோம்.
பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்குக் குடி வந்திருந்தாலும் இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களாகனாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரையும் விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பார்ப்பனர்கள் தமிழ் மொழியை தங்களது வாழ்க்கை வழிக்காகவும், வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய. அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்னவென்றால் இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய வைதிக காரியங்களிலும் தேவாதி முறை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யை மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமய, ஒழுக்க ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக்கொண்டு அதன்படியே பெரிதும் ஒழுங்குபவர்கள்.
இந்த பார்ப்பனர்களுக்கும் பழந்தமிழ் மக்களுக்கும் வாழ்க்கை ஒற்றுமை இல்லை.
இந்த பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்ற உடன் தமிழ் கலைகளையும், தமிழ் பெரியார்கள் பலரையும் தமிழர்கள் மற்கும்படி செய்து விடுபவர்கள். ஆரிய நாயுடுகளையும் ஆரியப் பெரியார் திருத்தமே பிரபலப்படுத்தி கே.சி. கொண்டு வந்து ....
இந்த பார்ப்பனர்கள் .................................... (சரியாக தெரியவில்லை)
இந்த பார்ப்பனர்கள் பிறப்பு உருவம் தோற்றம் முதலிய அமைப்புகளிலும் தமிழ் மக்களைவிட வேறுபடக் காணப்படுபவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய பிறப்பு அமைப்பு அதாவது Race (ரேஸ்) வேறு (ஆரிய ரேஸ்) என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள இந்த பார்ப்பனர்களுக்கும் தமிழர்களுக்கும் இரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களால் ஆளப்படுகிறவர்களான பொதுக்குடிகள் என்று சொல்லக் கூடியதை தவிர வேறு எந்த வகையிலும் ஒற்றுமைப்பட்டவர்கள் அல்ல என்பதோடு இந்த பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை அற்றவர்கள் என்றும் சொல்லலாம்.
குடிஅரசு - கட்டுரை - 04.06.1939
ஆகவே பார்ப்பனர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை விளக்குவோம். நாம் இப்போது பார்ப்பனர்கள் என்று குறிப்பிடுவதானது யார் யார் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களோ, யார் யாரை தங்களை வருணாசிரம தரும முறைப்படி முதல் ஜாதியார், மேலான ஜாதியார் என்றும் மற்றவர்களைத் தங்களுக்கு கீழ்ஜாதியார் என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களை ஆரிய வேத சாஸ்திர முறைப்படி உயர்ந்த ஜாதியாய் கருதிக் கொண்டு மற்ற ஜாதியாருடன் உண்பன தொடுவன முதலாகிய காரியங்கள் செய்யக் கூடாதென்றும் அந்தப்படி செய்வது தோஷமான காரியமென்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களது நடை, உடை, பாவனை முதலியவைகளில் மற்ற ஜாதியர்களைவிட மாறுபட்டவர்களாய் இருப்பதோடு அவைகள் (அம்மாறுபாடுகள்) தங்களுக்கு மாத்திரம் உரியனவே ஒழிய மற்ற எவ்வகுப்பாருக்கும் உரியவல்ல என்று கருதுகிறார்களோ, யார் யாருக்கு சொந்த ஊர் என்பதொன்று இல்லாமல் தொழிலுக்கும், வாழ்வுக்கும் சென்ற இடங்களையே தங்களது இடமாகக் கொண்டு நாடெங்கும் திரிந்து வாழ்பவர்களாக இருக்கிறார்களோ, யார் யார் தமிழ் பாஷையை இழிவான பாஷை என்றும், தமிழைவிட உயர்ந்த பாஷை வேறு ஒரு பாஷை உண்டு என்றும் அதுதான் தேவ பாஷை, மற்றது மிலேச்ச பாஷை என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தாங்கள் வைதிக காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது தமிழ் பேசுவது தோஷமான காரியமென்று கருதுகிறார்களோ, யார் யார் தங்களுடைய முன்னோர்களும் கோத்திரத் தலைவர்களும் தமிழர்கள் அல்லவென்றும் அவர்கள் பேசிய பாஷை தமிழ் அல்லவென்றும் அவர்களது சரித்திரங்கள் தமிழில் இல்லை என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ, யார் யாருடைய சமய மூல ஆதாரங்கள் தமிழில் இல்லை வேறு பாஷையில்தான் இருக்கின்றன என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ இவர்கள் எல்லோருமே தமிழை தங்கள் தாய் பாஷையாகக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்கூட பார்ப்பனர்களே யாகும். ஆகவே, இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தமிழர்களாவார்களா என்பதுதான் இவ்வியாசத்தின் தலைப்பின் அர்த்தமாகும்.
இந்த எல்லைக்குள் வரும் பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கை அவசியத்தின் பொருட்டு தமிழ்நாட்டில் குடியேறிய காரணம் கொண்டு தமிழ் பேசுபவர்கள். ஆந்திர நாட்டில் குடியேறிய காரணத்தின் பொருட்டு தெலுங்கு பேசுவார்கள். இதுபோலவே வங்காளத்திலும், குஜராத்திலும், சிந்துவிலும், காஷ்மீரத்திலும், ஒரிஸாவிலும் குடியேறிய காரணத்தின் பொருட்டு அந்த அந்த நாட்டு பாஷையே பேசுகிறார்கள்.
ஆதலால் அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு பாஷையை பேசுகின்ற பார்ப்பன மக்கள் எல்லோரும் அந்தந்த நாட்டார் என்கிற உரி கொண்டாடவே அந்தந்த நாட்டார் என்கின்ற பட்டிகையில் சேர்க்கவோ தகுதியற்றவர்களேயாவார்கள்.
இந்த முறையிலேயே தமிழ்நாட்டில் உள்ள இந்த மாதிரி பார்ப்பனர்கள் தமிழர்களா என்பதை ஆராய்கிறோம்.
பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்குக் குடி வந்திருந்தாலும் இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களாகனாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரையும் விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பார்ப்பனர்கள் தமிழ் மொழியை தங்களது வாழ்க்கை வழிக்காகவும், வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய. அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்னவென்றால் இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய வைதிக காரியங்களிலும் தேவாதி முறை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யை மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமய, ஒழுக்க ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக்கொண்டு அதன்படியே பெரிதும் ஒழுங்குபவர்கள்.
இந்த பார்ப்பனர்களுக்கும் பழந்தமிழ் மக்களுக்கும் வாழ்க்கை ஒற்றுமை இல்லை.
இந்த பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்ற உடன் தமிழ் கலைகளையும், தமிழ் பெரியார்கள் பலரையும் தமிழர்கள் மற்கும்படி செய்து விடுபவர்கள். ஆரிய நாயுடுகளையும் ஆரியப் பெரியார் திருத்தமே பிரபலப்படுத்தி கே.சி. கொண்டு வந்து ....
இந்த பார்ப்பனர்கள் .................................... (சரியாக தெரியவில்லை)
இந்த பார்ப்பனர்கள் பிறப்பு உருவம் தோற்றம் முதலிய அமைப்புகளிலும் தமிழ் மக்களைவிட வேறுபடக் காணப்படுபவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய பிறப்பு அமைப்பு அதாவது Race (ரேஸ்) வேறு (ஆரிய ரேஸ்) என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள இந்த பார்ப்பனர்களுக்கும் தமிழர்களுக்கும் இரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களால் ஆளப்படுகிறவர்களான பொதுக்குடிகள் என்று சொல்லக் கூடியதை தவிர வேறு எந்த வகையிலும் ஒற்றுமைப்பட்டவர்கள் அல்ல என்பதோடு இந்த பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை அற்றவர்கள் என்றும் சொல்லலாம்.
குடிஅரசு - கட்டுரை - 04.06.1939
No comments:
Post a Comment