Thursday 26 September 2013

திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம்


Photo: நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு  பகுத்தறிவு பெறுங்கள் 

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.


ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59) 

இனிமேலும் இந்த சாஸ்திரம்  சடங்குகள்  மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ?
நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள்

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த ம...ணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.


ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள்

Sunday 8 September 2013

விநாயகர் வரலாறு

நண்பர்களே!

பிள்ளையார் பிறந்தது எப்படி ? விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதும் தமிழின அறிவிற்கும் பண்பாட்டுக்கும் ஒரு போதும் ஒத்து...வராத ஒரு வெத்து விழா என்பதும் நம்மில் யாருக்கு தெரியும்?

பிள்ளையார் பற்றிய கற்பனைக் கதையை விளக்க வேண்டியது இந்த நவீன காலத்திலும் அவசியம். நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

தமிழரின் (இந்து) சைவ மதத்தில் விநாயகரே கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தளகர்த்தன் என்ற பார்ப்பனன் தான் முதன் முதலில் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் தமிழ் நாட்டில் புகுத்தினான். இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு பல கதைகள் உண்டு. (கடவுள் என்றாலே யாரும் கேள்வி கேட்க மாட்டார்களே!)

விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் பிள்ளையார் சதுர்த்தி ஆகும். எப்படி இந்த பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை (யாரும் கேள்வி கேட்கவும் கூடாது).
முதலில் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்பதை அவர்கள் சொல்வதை வைத்தே காண்போம் !

சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:

பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று கேட்டாளாம் ! அவள் தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாராம்.

பார்வதி குளிப்பதை பார்த்து காமமுற்ற வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்கு உண்ண்டைக் கணபதி தடுத்ததாம். நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கோவம் கொண்ட அழுக்கு உருண்டை தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. பதிலுக்கு சிவன் அடியாட்களை அனுப்ப அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது. சிவனுக்கு ஈகோ கிளம்பி, சூலாயுதத்தால் அழுக்குருண்டையின் (பிள்ளையாரின்) தலையை வெட்டிவிட்டார். இதை கண்டு பார்வதி அழுதுபுரளவே, வடக்கே தலை வைத்து படுத்திருந்த ஒரு கொம்பு உள்ள யானைக் குட்டியின் தலையைவெட்டி வந்து வந்து பிள்ளையாரின் உடலோடு ஒட்டியவுடன் அந்த உடலுக்கு உயிர் வந்து விட்டது. அவர்தான் இந்தப் பிள்ளையார் என்கிறது சிவபுராணம்.

ஒருகட்டத்தில் தன் தாயின் (பார்வதி) அழகில் மயங்கி அவரையே மனைவியாகக் கேட்டாராம் பிள்ளையார். இதனால் இவருக்கு பெண்கிடைக்க வில்லையாம். இவரின் இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிகள் உண்டு என்று இன்னொரு கதை. எதை நம்புவது? பிறப்பு -இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால் பிள்ளையாருக்கு ?

உண்மையிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏன் இப்படி முரண்பாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்? உண்மையில் ஏழை எளிய மக்களை பக்தி என்னும் பெயரில் புராண புரட்டுகளை இட்டு கட்டி காசுபார்க்க பார்ப்பனர்கள் திரித்த கட்டுக் கதையே பிள்ளையார்.


இந்தப் பிள்ளையாரின் பெயரால் களிமண் சிலை செய்து தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைவைத்து , அபிஷேகம் என்னும் பெயரில் பால், நெய் போன்றவற்றை குடம் குடமாக ஊற்றி படையலிட்டு மூன்றாம் நாள் தூக்கிப் போய் கடலிலே உடைத்து வீசுவதற்கு ஒரு விழா..

மதவெறியை பரப்பி வெற்றுக் கூச்சலிட்டு பஜனை பாட ஒரு கூட்டம்.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்!

கடவுளுக்கு ஏன் மனைவியின் தேவை? பார்வதிதன் காவலுக்கு வைத்த அழுக்கை கடவுள் என்பதா?

மனைவி குளிப்பதை பார்த்து சிவனுக்கு காமம் வந்தது ஏன்? கடவுளுக்கு ஆண் பெண் உணர்ச்சி எப்படி வரும்?
எல்லாம் வல்ல சிவனை அழுக்குருண்டை அடித்து விரட்டியது எப்படி? எல்லாம் வல்ல சிவன் ஏன் அடி ஆள்களை அனுப்ப வேண்டும்? அழுக்குருண்டையின் தலையை வெட்ட வேண்டும்? வெட்டப்பட்ட தலையை மந்திரம் ஓதி ஒட்ட வேண்டியதுதானே ! யானைத் தலையைதான் ஒட்ட வேண்டியதன் காரணம் என்ன?

சிறிய குழந்தையின் உடம்புக்கு - பத்து அடி நீளமுள்ள யானையின் தலை பொருந்துமா? தலைவேறாக உடல் வேறாக வெட்டிய பிறகு, ஒட்டி வைத்தால் உயிர் பிழைக்க முடியுமா? யானையின் உருவத்தோடு எந்தவொரு பெண்ணுக்காவது குழந்தை பிறக்க முடியுமா?

தன்னுடைய அம்மா பார்வதியை போலவே தனக்கு அழகான பெண் வேணும்னு சொன்ன பிள்ளையார்தான் குழந்தைகள் வழிபட வேண்டிய தெய்வமா?

பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், உயிர் கொடுத்ததாகவும் உள்ளபோது பிள்ளையார் எப்படி சக்தி உள்ள கடவுள் என்பது ?

எந்த விதத்திலும் தமிழர்களோடு ஒத்துப் போகாத மார்வாடி குசராத்தி சேட்டுகள் லட்சக் கணக்கில் செலவிட்டு விதத்திலும் விநாயகர் சதுர்த்தியை மட்டும் கொண்டாடுவது ஏன்?
ஆயிரம் கடவுள் இருந்தும் மார்வாடி குசராத்தி சேட்டுகளின் வீடுகளில் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களில் பிள்ளையார் மட்டும் இருப்பதன் பின்னனி என்ன?

நம் முன்னோர்களால் கலை நயத்துடனும் வரலாற்று சிறப்புடனும் கட்டப்பட்ட கோயில்கள் இருக்க லட்சக் கணக்கான விநாயகர் கோயில்கள் மட்டும் தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு புதிது புதிதாக முளைத்ததின் பின்னணி என்ன?

இலைப் பிள்ளையார் தொடங்கி ரோபட் பிள்ளையார், ரெஸ் கார் பிள்ளையார் என பல்லாயிரக்கணக்கான பிள்ளையார்கள் தோன்றியது எப்படி?

நண்பர்களே!
ஆபாசம், திருட்டு, கொலை, ஏமாற்று போன்றவை நிரம்பி வழியும் புராணக் கதைகளை நம்பி புத்தியை இழப்பது அறியாமை செயல்தானே! இது போன்ற புரட்டுகளின் பின்னால் கோஷம் போட்டு குதிப்பது அறிவுடையவர்கள் ஏற்கக் கூடிய செயல் தானா !

பக்தி என்னும் பெயரில் மனிதரை இழிவு படுத்தும் மடமையை எதிர்த்து மான உணர்ச்சி கொள்வோம்!
ஏன் எதற்கு எப்படி என்னும் பகுத்தறிவை மக்களுக்கு புகட்டுவோம்.!
தமிழர் பண்பாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கி ஆபாசக் கதைகளை
புகுத்தி இழிவு செய்யும் மார்வாடி குசராத்தி சேட்டுகளின் பண்டிகைகளை விரட்டுவோம்!

மக்கள் தங்கள் உரிமைக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் வீதிக்கு திரளும் மனப்பாண்மையை மாற்றி வெறும் வெற்றுக் கூச்சல் சம்பிராதாய ஊர்வலமாக்கும் வினாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.!

மனிதனின் அறிவு , ஆற்றல், நேரம் அனைத்தும் நம்முடைய சமுதாய வளர்ச்சிக்காகவே செலவிடப்பட வேண்டும். மக்களின் மனக்கஷ்டத்தையும், அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு மத வெறியை கிளப்பி பணம், பொருள், நேரம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை விரையமாக்கி கொண்டாடப்படும் போலி விழாக்களை புறக்கணிப்போம்!
மண்ணுக்கும் மனிதர்களுக்கும் நன்றி செலுத்தும் மறைக்கப்பட்ட
தமிழர் விழாக்களை முன்னெடுப்போம் !