Wednesday 15 April 2020

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?



"100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே
 வெள்ளையன் செய்து வந்தான்? நம் நாட்டுப் பணமென்ன வெள்ளையன் கொண்டு போனால்தான் குறையுமா? வடநாட்டான் கொண்டு போனால் குறையாதா? இதைத் தடுக்க தற்போது வந்துள்ள சுதந்திரத்தில் திட்டமுண்டா? சுரண்டல் என்று வந்துவிட்டால் 5000 மைலுக்கப்பாலிருந்து வெள்ளையன் சுரண்டுவதும் 2000 மைலுக்கு அப்பாலிருந்து வடநாட்டான் சுரண்டுவதும் நம் பொக்கிஷத்தைப் பொறுத்த வரை ஒன்றுதானே? வெள்ளையனாவது துப்பாக்கி வெடிகுண்டுவைத்து நம்மை அடக்கிவந்தான். ஆனால் தோழர்களே! இந்த வடநாட்டுப் பார்ப்பனீயம், தேசியம் என்ற பித்தலாட்டத்தால் அறிவைக் கட்டுப்படுத்தி சுதந்திரத்தை அடக்கி ஆள்வது உண்மையா இல்லையா? கூறுங்கள் தோழர்களே!"

17-8-1947ல் அரூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் சொற்பொழிவு!