Saturday 15 October 2016

உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்

மண்ணாங்கட்டி : தம்பி நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி!
என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி - சங்கரச்சாரி சாமி காலு கிழே தரையில உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.
இன்னொருத்தர் சங்கரச்சாரி சாமிக்கு சரி சமமா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்???

என்ன காரணத்திற்காக பூனூல் போட்டவர் கடவுளுக்கு பூஜை செய்றார்
பூனூல் போடாதவங்க முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றும் கடவுளுக்கு பூஜை செய்ற உரிமைக்காக போராடிகிட்டு இருக்காங்க???

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கோவில் தேர் இழுத்தா - வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள் கோவில் தேர் இழுக்க விடாமல் கலவரம் செய்றாங்க???

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பிணத்தை பொது வழியில் எடுத்து சென்றால் - வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள் பிணத்தை எடுத்து செல்ல விடாமல் கலவரம் செய்றாங்க???

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்றீங்க - பிறகு எதுக்கு இந்து சாதிக்குள் காதலித்தால் தலையை வெட்டி தண்டவாளத்தில் போடுறாங்க???

தம்பி இதற்கெல்லாம் உன்னை மிதிக்க சொன்னவன் பதில் கொடுக்க மாட்டான்.

பெரியார் இடத்தில பதில் இருக்கிறது.

உனக்கு பதில் தெரிந்தால் - உன்னை மிதிக்க சொன்னவன் முகத்தில் காரி துப்புவாய்...