Thursday, 6 October 2011

பெரியார் சிந்தனைகள்

‎'குந்தி'க்கு சூரியன் புள்ள கொடுத்தான்னு சொல்றானுங்க. 2 கோடி மைலுக்கு அப்பால ...இருக்கும் போதே சூடு தாங்கல. சூரியன் பூமிகிட்ட வந்தால் பூமியே பஸ்பமாயிரும். இதுல குந்திகிட்ட எப்படி படுப்பான்? குந்தி எப்படி புள்ள பெத்துப்பாள்? - [பெரியார்]
 
‎"முருகன் மயில்மேல் போனானாம். ஏண்டா இரண்டு பக்கமும் கால் போட்டா எப்படீடா மயிலால பறக்க முடியும்" - [பெரியார்]

கடவுள்கள் அன்று செய்ததாக சொல்லப்படும் லீலைகளை மனிதர்கள் இன்று செய்தால், பக்தர்களே ! ஏற்றுக்கொள்வீர்களா ?

ஆடைகளை வெளுப்பவர்கள், விவசாய கூலி வேலை செய்பவர்கள் , மரம் இரும்பு தங்கம் முதலியவ...ைகளைக் கொண்டு மக்களுக்கு பயன் தரும் சாதனங்களை செய்பவர்கள் கீழ் ஜாதியம் . எந்த உடல் உழைப்பும் இன்றி ஒரு பயனுள்ள செயலையும் செய்யாமல் மக்களை மந்திரம் என்ற பெயரால் தந்திரமாக ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் மேல் ஜாதியினாறாம் . சற்று சிந்தியுங்கள் ! இது தான் அர்த்தமுள்ள இந்து மாதமாம் .
 
பாலியல் தொழில் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பெண்ணும்,ஆணும் இன்றைக்கு எந்த ஆயுதத்திற்க்கு பூசை செய்வார்கள் ?

கோயிலுக்குள் உருவச்சிலை இருக்கும் இடத்துக்குள் செல்ல அனுமதிக்கபடாதவன் சாமி கும்ப...ிட கோயிலுக்கு செல்வது - தன்னை இழிபிறவி , கீழ் மகன் என்பதை ஏற்றுக் கொள்வதாகும் . 
 
பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் அஞ்சுவீர்களா ? கொஞ்சுவீர்களா ?

தொழில் செய்யப் பயன்படும் கருவிகளுக்கு ஆயுத பூஜை செய்யும் பக்தர்களே ! திருடர்களும...் ஊழல்வாதிகளும் பூஜை செய்தால் அவர்களையும் கடவுள் காப்பாற்றுவாரா ? மருத்துவரும் காவல் துறையினரும் ஆயுத பூஜை செய்வது எதற்கு ? நோய்களும் , திருட்டுகளும் , களவாணித்தனமும் பெருகவா ?
 
குழந்தைகளை படைப்பது கடவுள் சக்தி என்றால் குடும்ப கட்டுப்பாடு செய்த பின்பு கடவுளால் குழந்தைகளை படைக்க முடியுமா?

கல்விக்கு காரணம் சரஸ்வதியா ? இல்லை ஆசிரியரா ?

பசியால் வாடும் குழந்தைக்குப் பால் கிடைக்காத நாட்டில், கல் பொம்மைக்கு பால் அபிசேகம் ஒரு கேடா ?

கடவுள் படங்களை நாத்திகர்கள் கொளுத்தினால் அலறும் பக்தர்கள் , கடவுள் படம் போட்ட பட்டாசுகளைக் கொளுத்தலாமா ?


சுவிஸ்நாட்டு வங்கியில் யார் யார் கள்ளப்பணம் வைத்துள்ளார்கள் என்ற பட்டியலை சோதிடன் கூறுவானா? இல்லை அதை பற்றி எந்த ஏட்டிலாவது கூரியிருகிரார்களா ?
ஆண்களின் மறுமணத்தை மதிக்கும் உலகம் பெண்களின் மறுமணத்தைப் பழிப்பது ஏன் ?

"மணமான பெண்" என்பதன் அடையாளம் "தாலி" என்றால்
"மணமான ஆண்" என்று அறிய அவனுக்கு தாலி எங்கே ?
கன்னி, கணவனில்லாமல் தாயானால், கடவுள் செயல் (பரிசுத்த ஆவி) என்று சும்மா இருப்பாயா ?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில் சோதிடனிடம் ஏன் போக வேண்டும் ?
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த குழந்தைகளில் ஒரு சில இறந்து மற்றக் குழந்தைகளுடன் உயிருடன் இருந்தாலே சோதிடம் பொய் என்றாகி விடாதா ?
பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருந்தால் மட்டுமே  சோதிடம் கணிக்க முடியும் என்பதால் பிறந்த நேரமே முக்கியமாகிறது .... குழந்தைக்கான கரு உருவான நேரத்தை எடுத்துக்கொள்வதா ? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியுமே அந்த நேரமா ? குழந்தை முழுவதும் வெளியில் தெரியுமே ? தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டு தாயின் தொடர்பு விலக்கப்பட்ட நேரமா ? அறுவைச் சிகிச்சை எனில் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியில் எடுத்த நேரமா ?குறைப்பிரசவத்தில் கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது ? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா அல்லது கருவியை விட்டு வெளியில் எடுக்கும் நேரமா ?
ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே அக்குழந்தையின் வாழ்க்கை அமையும் என்றால் , அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமே . அவ்வாறு இருக்கிறதா ? பட்டியலிட்டு பரிசோதனை செய்யத்தயாரா ?
ஜபம் செய்தே நோயைக் குணப்படுத்தவதாகக் கூறும் பாதிரியார்கள் இருக்கும் போது , கிறிஸ்தவ மருத்துவமனைகளில் டாக்டர்கள் எதற்கு ?
மறுபிறப்பு என்பதை நம்பும் நீங்கள் திதி கொடுப்பது யாருக்கு ?
பூமி தட்டை என கூறுகிறது பழைய ஏற்பாடு இக்கருத்தை ஏற்றுக் கொண்ட கிறித்துவர்கள் எத்தனைப் பேர் ?
தீயணைப்பு துறையை வைத்திருப்பது அக்னி பகவானுக்கு எதிரான நாத்திக செயல் அல்லவா ?
முல்லைப் பெரியாறு தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தர மறுக்கும் மலையாளிக்கு, இருமுடி என்ற பெயரில் தமிழ்நாட்டுப் பொருட்களை கொண்டு போய் கொடுக்கிறீர்களே இது நியாயமா?
அம்மை நோயைத் தடுப்பது ஆத்தாளா? அல்லது ஆஸ்பத்திரியா ? வெள்ளைக்காரனுக்கு அம்மை நோய் வந்தால் ஆத்தா காப்பாற்றுவாளா இல்லை இயேசு காப்பாற்றுவாரா ? உலகை படைத்த கடவுள் இந்திய மக்களுக்கு மட்டும் உதவுவது ஏன் ?
பெண் சாமிக்கு ஆண் பூசாரி சேலை கட்டலாமா ?
நீ வணங்கும் முருகன் கலப்புத் திருமணம் செய்து கொண்ட போது மனிதன் கலப்பு திருமணம் செய்தால் வெறுப்பது ஏன் ?
மனிதனுக்கு கடவுள் கொடுத்த அறிவை மனிதன் தவறாக பயன்படுத்தினால் அது கடவுள் குற்றமா ? எனக் கோபப்படும் பக்தர்களே ! மனிதன் தவறு செய்வான் என்பது எல்லாம்வல்ல கடவுள் அறியவில்லையா ??? அல்லது மனிதனை தவறு செய்யாதவாறு படைக்க கடவுளுக்கு தெரியவில்லையா ???
துன்பங்களுக்கு எல்லாம் முற்பிறவியின் பாவமே காரணம் என்று சொல்லும் பக்தர்களே ! நம்மை முதன் முதலாக படைக்கும் போதே நல்லவனாக கடவுள் படைத்திருக்கலாமே? பாவம் செய்பவனாக படைத்ததுவிட்டு , பிறகு அடுத்த பிறவியில் துன்பப்பட செய்வது ஏன் ? இந்த விளையாட்டு எதற்கு ??
அணுவில் இருக்கும் ஆண்டவன் அனுகுண்டில் இல்லையா ?
அவனன்றி ஓரணுவும் அசையாது எனில் , கோவில் சிலை வெளிநாடு செல்வது(கடத்துவது) யார் செயல் ...?
 

அன்பே உருவான கடவுளுக்கு கொலை கருவிகள் எதற்கு ?
எல்லாம் வல்ல கடவுளின் கோயிலுக்குப் பூட்டும், காவலும் ஏன் ?
 
கடவுளர் படை இருக்க , எல்லையில் காவற்படையினர் ஏன் ?
 
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசை இல்லை ; ஆனால் நடமாடாக் கற்சிலைக்கு கோயில் தேவையா ?
 
உலகை படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தவர் யார் ?
 
 ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமண வாழ்க்கையில், தரித்திரமும் , சண்டையும், சாவும் வரலாமா ?

1 comment:

  1. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
    நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
    வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
    வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
    யாதெனில் ..
    சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

    உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
    கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளை விளையாட்டு ....

    குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
    அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

    See this site :
    http://www.vallalyaar.com/

    ReplyDelete