
'குந்தி'க்கு சூரியன் புள்ள கொடுத்தான்னு சொல்றானுங்க. 2 கோடி மைலுக்கு அப்பால ...இருக்கும் போதே சூடு தாங்கல. சூரியன் பூமிகிட்ட வந்தால் பூமியே பஸ்பமாயிரும். இதுல குந்திகிட்ட எப்படி படுப்பான்? குந்தி எப்படி புள்ள பெத்துப்பாள்? - [பெரியார்]

"முருகன் மயில்மேல் போனானாம். ஏண்டா இரண்டு பக்கமும் கால் போட்டா எப்படீடா மயிலால பறக்க முடியும்" - [பெரியார்]

கடவுள்கள் அன்று செய்ததாக சொல்லப்படும் லீலைகளை மனிதர்கள் இன்று செய்தால், பக்தர்களே ! ஏற்றுக்கொள்வீர்களா ?

ஆடைகளை வெளுப்பவர்கள், விவசாய கூலி வேலை செய்பவர்கள் , மரம் இரும்பு தங்கம் முதலியவ...ைகளைக் கொண்டு மக்களுக்கு பயன் தரும் சாதனங்களை செய்பவர்கள் கீழ் ஜாதியம் . எந்த உடல் உழைப்பும் இன்றி ஒரு பயனுள்ள செயலையும் செய்யாமல் மக்களை மந்திரம் என்ற பெயரால் தந்திரமாக ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் மேல் ஜாதியினாறாம் . சற்று சிந்தியுங்கள் ! இது தான் அர்த்தமுள்ள இந்து மாதமாம் .

பாலியல் தொழில் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பெண்ணும்,ஆணும் இன்றைக்கு எந்த ஆயுதத்திற்க்கு பூசை செய்வார்கள் ?

கோயிலுக்குள் உருவச்சிலை இருக்கும் இடத்துக்குள் செல்ல அனுமதிக்கபடாதவன் சாமி கும்ப...ிட கோயிலுக்கு செல்வது - தன்னை இழிபிறவி , கீழ் மகன் என்பதை ஏற்றுக் கொள்வதாகும் .

பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் அஞ்சுவீர்களா ? கொஞ்சுவீர்களா ?

தொழில் செய்யப் பயன்படும் கருவிகளுக்கு ஆயுத பூஜை செய்யும் பக்தர்களே ! திருடர்களும...் ஊழல்வாதிகளும் பூஜை செய்தால் அவர்களையும் கடவுள் காப்பாற்றுவாரா ? மருத்துவரும் காவல் துறையினரும் ஆயுத பூஜை செய்வது எதற்கு ? நோய்களும் , திருட்டுகளும் , களவாணித்தனமும் பெருகவா ?

குழந்தைகளை படைப்பது கடவுள் சக்தி என்றால் குடும்ப கட்டுப்பாடு செய்த பின்பு கடவுளால் குழந்தைகளை படைக்க முடியுமா?

கல்விக்கு காரணம் சரஸ்வதியா ? இல்லை ஆசிரியரா ?

பசியால் வாடும் குழந்தைக்குப் பால் கிடைக்காத நாட்டில், கல் பொம்மைக்கு பால் அபிசேகம் ஒரு கேடா ?

கடவுள் படங்களை நாத்திகர்கள் கொளுத்தினால் அலறும் பக்தர்கள் , கடவுள் படம் போட்ட பட்டாசுகளைக் கொளுத்தலாமா ?
சாதியும் மதமும் சமயுமும் காணா
ReplyDeleteஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/